ஐசிஐசிஐ பற்றி எழுதக்கூடாது என்று இருந்தேன். மறுபடியும் அதே வங்கியின் இன்னொரு பிரிவிடம் மாட்டிக்கொண்டு, என் கோபத்தைத் தொலைக்க வேண்டியதாயிற்று.
இந்த முறை ஐசிஐசிஐ லோம்பார்ட் – காப்பீடு நிறுவனம். சென்ற டிசம்பர் மாதமே என் இரண்டு சக்கர வாகனத்தின் வாகன காப்பீடு முடிந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான் வாகனம் பயன்படுத்துவதை முழுவதும் குறைத்துவிட்டு, பேருந்துகளையே பயன்படுத்தி வருகிறேன். வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு சில இடங்களுக்கு மட்டும் வாகனம்.
வழக்கம்போல், சென்ற வெள்ளியன்று இராதாகிருஷ்ணன் சாலையில், நீல்கிரீஸ் அருகே இருக்கும் பெரிய பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் போடப் போனேன். நான் சென்றிந்த நேரம், அங்கே ஐசிஐசிஐ வாகன காப்பீடு வழங்கும் நபர் உட்கார்ந்திருந்தார்.
ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் அந்த பெட்ரோல் மையத்தில்தான் என் இன்ஷூரன்ஸைப் புதுப்பித்து இருக்கிறேன். அதனால், அவர் அருகே போய் வாகனத்தை நிறுத்திவிட்டு, பழைய பாலிசியை எடுத்துக்கொடுத்தேன். பாலிசி எக்ஸ்பைர் ஆகிவிட்டது, புதுதாக போட, ரூ.950க்கு மேல் ஆகும் என்றார். சரியென்று சொல்லிவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் தொலைபேசியில் பேசத் தொடங்கினேன். அவர் மீண்டும் கூப்பிட, பாலிசி போட்டிருந்தார்.. ரூ. 972க்கு கிரெடிட் கார்டைத் தீற்றவும் ஒத்துக்கொண்டேன். சிலிப்பில் கையெழுத்தும் போட்டாச்சு.
அப்போதுதான், எனக்கு அது ஞாபகம் வந்தது. சென்ற ஆண்டு, பாலிசி போடும் போது ரூ. 604 தானே கட்டினோம். எதற்கு 900க்கு மேல் ஆச்சு என்று யோசனை.
“ பத்தாயிரம் ரூபாய்க்கு ஆக்ஸிடெண்ட் இன்ஷூரன்ஸ் கூட போட்டு இருக்கு சார்.. அதுக்கு பிரிமியம் ரூ. 290.”
“நான் அதை கேக்கலியேப்பா… எதுக்கு என்கிட்ட சொல்லாம போட்டீங்க?”
“பாலிசி எக்ஸபைர் ஆயிடுச்சு சார்… அதனாலயும் ஜாஸ்தி ஆயிடுச்சு..”
“பிரதர், இன்ஷூரன்ஸ் தெரியாதவங்க சொல்லுங்க. வேற நேஷனலைஸ்டு இன்ஷூரன்ஸ் கம்பெனி கிட்ட போனா..இதை விட பிரிமியம் கம்மியாகும்.. எதுக்கு என்னகிட்ட சொல்லாம செஞ்சீங்க?”
“ஐசிஐசிஐல ரெண்டையும் சேர்த்துத்தான் போடணும்னு இன்ஸ்டரக்ஷன் சார்…”
“இது அநியாயமா இல்ல. நீங்க பாலிசி விக்க நான் தான் கெடைச்சேன்?”
“ஆக்ஸிடெண்ட் கவரேஜ்தானே சார்?”
“அதை முடிவு செய்ய நீங்க யாரு? வேணும் வேணாங்கறது என் முடிவுதானே?”
மேலும் பேச்சைத் தொடர விரும்பாதவர் போல், இன்னொரு பில்லையும் எழுதத் தொடங்கினார் அந்த நபர்.
“இது என்ன?”
“சர்வீஸ் சார்ஜ்ஜுக்கு பில்.”
“எதுக்கு சர்வீஸ் சார்ஜ்?”
“ஐசிஐசிஐ லோம்பார்ட் இந்த டெஸ்க்கை நிர்வாகம் செய்ய எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.. 99 ரூபாய் எங்க சர்வீஸ் சார்ஜ்.”
ஏதோ ஒரு புரோக்கரேஜ் நிறுவனம் அந்த வாகன இன்ஷூரன்ஸ் மேஜை நிர்வாகம் செய்வது அப்போதுதான் தெரிந்தது.
“போன வருஷம் கூட, ஐசிஐசிஐ ஆள் இங்கே இருந்தாரேப்பா”
“எங்கிட்ட கொடுத்துட்டாங்க சார்.”
“அப்படின்னா.. இன்ஷூரன்ஸ் கமிஷன், சர்வீஸ் சார்ஜ் எல்லாம் நீங்க ஐசிஐசிஐ லோம்பார்ட் கிட்டதானே வாங்கிக்கணும். என்கிட்ட ஏன் வாங்கறீங்க?”
என் கேள்வி காற்றி தொங்கிக்கொண்டு நிற்க, அடுத்து வந்த வாகனத்தின் இன்ஷூரன்ஸைப் பார்க்க போனார் அந்த நபர். அத்தனை அலட்சியம். அத்தனை பொறுப்பு. என்ன படித்து, என்ன விவரம் தெரிந்துகொண்டு என்ன பயன்? கண்ணெதிரே ஒருவர் ஏமாற்றுகிறார். அதையும் மிக லாகவமாய், நேர்த்தியாய், சுத்தமாக. ஒன்றும் செய்ய முடியாமல், எரிச்சலும் கோபமும் மட்டுமே மிச்சம்.
படித்தவனையும் படிக்காதவனையும் சேர்ந்து மொத்தமாக முட்டாளாக்கும் செயல் இது. பகல்கொள்ளை என்ற வார்த்தைக்கு அன்றுதான் எனக்கு அர்த்தம் புரிந்தது!
In India, there is no difference between educated or uneducated. They both cheat, and they both lie, they both been cheated and they both been deceived by individuals, officials, state and central.
It is the mindset that has been precipitated for hundreds to thousands of years. Just imagine what would be the fate of poor people who cannot voice against these ICICI agent like crocodiles, atleast you asked questions, and you raised your voice and you tried to reason it to the idiot from the bank, but you have done something, at the end of they day you will go to sleep thinking you have tried your best. But, imagine if you were a poor, innocent villager or socially and religiously ridiculed, oppressed people, they would go to sleep with pain/agony and probably will not sleep well………the reality of India, more than quarter of Indians have been cheated and betrayed for thousands of years just like your experience with that man?. That is India?. What a Shameful bunch of people who are destroying the nation.
You can always cancel and revert the money back to your card. I did it once. From that time onwards i am taking only nationalized bank insurance 🙂
முட்டாளாக்குவது மட்டுமல்ல. மற்றவனைப் போண்டியாக்கி தம்மை வளர்ப்பதற்காகவும.
Royal Sundaram Cheap and Best Sir.